Sharon Rose Ministries Sharon Rose Ministries
  • Home
  • Meditation
    • Let's Meditate
    • Praise Offering
    • Bible Quiz - தமிழில்
    • New Believers
    • For your Spiritual Life
    • Sing and Praise
  • Holy Bible
    • புதிய ஏற்பாடு (Audio Bible)
    • பரிசுத்த வேதாகமம் (புத்தக வடிவில்)
    • தமிழ் - KJV (Parallel Reading)
    • தமிழ் - NKJV (Parallel Reading)
  • About
    • Sharon Rose Ministries
    • Contact SRM
IST (UTC+5.5)
Sharon Rose Ministries Sharon Rose Ministries
  • Home
  • Meditation
    • Let's Meditate
    • Praise Offering
    • Bible Quiz - தமிழில்
    • New Believers
    • For your Spiritual Life
    • Sing and Praise
  • Holy Bible
    • புதிய ஏற்பாடு (Audio Bible)
    • பரிசுத்த வேதாகமம் (புத்தக வடிவில்)
    • தமிழ் - KJV (Parallel Reading)
    • தமிழ் - NKJV (Parallel Reading)
  • About
    • Sharon Rose Ministries
    • Contact SRM

  1. You are here:  
  2. Lets Meditate
  3. Messages - 2022
  4. தேவன் அனுப்பினார்
Happy Resurrection Sunday
Holy Week
Resurrection of Lord Jesus Christ
Resurrection of Lord Jesus Christ
Sharon Rose Ministries
Word of God for the new year 2025 - Sharon Rose Ministries
Tamil Bible Quiz (Memory Verse)
ஸ்தோத்திர பலிகள்

இன்றைய பரிசுத்த வேத வசனம்

தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; (பிலிப்பியர் 2:5)

You may check

Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate


திடன் கொள்ளுங்கள்

புத்தாண்டு தேவ செய்தி 2019

இதோ வருகிறேன்

2021 - புத்தாண்டு தேவ செய்தி

பக்தியற்றவர்கள்

எப்பொழுதும் உம்மோடு

கிருபையும் சத்தியமும்

தேவன் அனுப்பினார்

(God sent forth his Son)

(கிறிஸ்துமஸ் தேவ செய்தி - 2022)


Sharon Rose Ministries

டிசம்பர் 2022 (Christmas Message December 2022)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

​


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

John 1v14

நமக்காக இந்த உலகத்தில் வந்து பிறந்த தேவ குமாரன், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கொண்டாடுகிற உங்கள் யாவருக்கும் அவருடைய நாமத்தினாலே அன்பின் வாழ்த்துகள்!

Merry Christmas & Blessed New year 2023

கிறிஸ்து இயேசுவையே கொண்டாடுவோம்!

தேவனுக்கே மகிமையை செலுத்துவோம்! ஆமென்.

John 1v14

(கலாத்தியர் 4:5-6) காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

இந்த மகிழ்ச்சியான நேரங்களில் பரிசுத்த வேதம் கிறிஸ்து இயேசுவின் பிறப்பை குறித்து போதிக்கும் சத்தியத்திலிருந்து, ஒரு சிறு துளியை மாத்திரம் நாம் தியானிப்போம்.  சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிற சத்திய ஆவியானவர் நமக்கு பூரணமாக உதவி செய்வாராக. ஆமென்.

நம்முடைய பரிசுத்த வேத தியானத்திற்கான ஆதார வசனங்களை கீழே காண்போம்.

(கலாத்தியர் 4:5-6) காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேரான சொந்த பிள்ளையை, மகனை - இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திலே அனுப்பின பிரதான நோக்கம் மனுக்குலத்திற்கு இரட்சிப்பை, ஆத்தும மீட்பை, உண்டாக்கி தம்முடனே ஒப்புரவாக்கிகொண்டு மனிதர்களை தம்முடைய பிள்ளைகளாக்கி, அதாவது தேவனுடைய பிள்ளைகளாக்கி தம்முடைய ராஜ்யத்துக்கு உரியவர்களாய் அவர்களை என்றென்றும் தம்மோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்பதே. இந்த பிரதான நோக்கத்திற்குள் மனிதர்களுக்கு அடங்கியிருக்கிற ஏராளமான பாக்கியங்களில் இரண்டை  குறித்து மட்டும் இன்றைக்கு நாம் தியானிப்போம். அவை பாவ மன்னிப்பு மற்றும் நித்திய ஜீவன். காரணம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததினால் தான் இது சாத்தியமாயிற்று. இந்த இரண்டு பாக்கியங்களும் மனிதனுக்கு இந்த உலக வாழ்வில் தேவையா? இதை சற்றே தியானிப்போம்.

மனிதனுக்கு இந்த வாழ்வில் சந்திக்கும் இரண்டு கொடிய காரியங்களில் ஒன்று பாவம், மற்றொன்று மரணம்.  இரண்டுமே மனித குலத்தை அடிமைப்படுத்துகிற காரியங்கள். பாவமும் அதன் பழக்கவழக்கங்களும் நம்மை அடிமைப்படுத்துகிறது. மரண பயம் நம்மை அடிமைப்படுத்துகிறது. இதற்கு நீங்கலாகி தப்பிப் போவது எளிதான காரியமல்ல. பரிசுத்த வேதத்தில் கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை நமக்கு விளக்கிச் சொல்லுகிறார்.

(2 பேதுரு 2:19) ... எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.

(யோவான் 8:34) இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(எபிரெயர் 2:15) ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

(சங்கீதம் 89:48) மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)

கொடிய பாவங்களினால், பாவ பழக்க வழக்கங்களினால், கொடிய மரண பயத்தினால் நாம் அடிமைகளாக்கப்படும்போது நாம் சுயமாக எதையும் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை. அதனால் இவற்றிற்கு எதிராக நம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாவம் செய்தே ஆக வேண்டும். மரித்துதான் ஆக வேண்டும். காரணம் நாம் அடிமைகள். பாவமும் மரணமும் நமக்கு எஜமானர்களாக இருக்கிறது.

(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; ..

(யாக்கோபு 1:14-15) அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், நாமாகவே இதிலிருந்து மீள முடியாது. ஒருவர் வந்து தான் நம்மை மீட்க வேண்டும். நம்மை விடுதலையாக்க வேண்டும்.

பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்டு இந்த உலகத்திற்கு வந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை எப்படி மீட்டுக் கொள்கிறார், விடுதலையாக்குகிறார் என்பதை குறித்து பரிசுத்த வேதத்திலிருந்து நாம் தியானிப்போம்.

1] பாவ மன்னிப்பு : பாவத்திலிருந்து, பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்பு மற்றும் விடுதலை

பாவத்திலிருந்து விடுதலை - அப்பொழுதுதான் பரிசுத்தமாகுதல் என்னும் பலன்:

(தீத்து 3:3) ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

(1 பேதுரு 4:3) சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.

(எபேசியர் 2:2) அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு, தன்  பாவங்களுக்குக்காக தான் அவர் சிலுவையில் பாடுபட்டு அவருடைய பரிசுத்த  இரத்தம் சிந்தி பாவ பரிகாரத்தை உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை விசுவாசிக்கும் போது - தன் முழு விருப்பத்தோடும், முழு மனதாக இயேசு கிறிஸ்து ஒருவரையே தன் ஒரே சொந்த தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் போது அவனுக்கு இரட்சிப்பை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருளிச் செய்கிறார். இந்த இரட்சிப்புக்குள் பாவ மன்னிப்பின் மூலமாக பாவத்திலிருந்து மீட்பும் விடுதலையும் மனிதனுக்கு அவர் அருளிச்செய்கிறார். அதன் பிறகு பரிசுத்த வேதத்தின் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவராலும் ஒரு புதிய பரிசுத்த வாழ்வை வாழ அவர் தாமே ஒவ்வொருவருக்கும் உதவி செய்து முடிவு வரை அப்படியே பாதுகாத்து நடத்தி, பரலோகம் கொண்டு சேர்க்கிறார்.

(1 யோவான் 1:7) அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

(எபேசியர் 2:8) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

(யோவான் 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

(எபேசியர் 2:1) அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

(ரோமர் 6:22) இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

தேவனுக்கு அடிமைகள் என்பது நாம் பரிசுத்தமாக வாழ்வதற்கும், தேவனுடைய நீதியை உடையவர்களாயிருந்து நீதியான கிரியைகளை செய்வதற்கும், தேவ சித்தத்தை நிறைவேற்றவும் தேவனுக்கு கீழ்ப்படிந்திருக்கும்படி நாமே விரும்பி முழு மனதோடு நம்மை தேவனாகிய கர்த்தருக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பதையே குறிக்கிறது.

(ரோமர் 6:19) உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

(1 பேதுரு 2:16) சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.

மேலும்,

(ரோமர் 6:16) மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

(ரோமர் 6:18) பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.

(1 கொரிந்தியர் 7:22) கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.

(1 கொரிந்தியர் 7:23) நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பாவத்திலிருந்து மீட்பும் விடுதலையும் நமக்கு எப்படி உண்டானது என்பதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்கிப் போதிக்கிறது.

(1 யோவான் 1:7) ...அவருடைய (தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

(1 கொரிந்தியர் 7:23) நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாவமில்லாத பரிசுத்த இரத்தமே மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக. விலைக்கிரயமாக சிலுவையில் சிந்தப்பட்டது. அவருடைய பரிசுத்த இரத்தமே மனிதர்களின் பாவத்திற்கு பரிகாரம். அவரே நம் பரிகாரியாகிய கர்த்தர்.

(தீத்து 3:4-5) நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

(யோவான் 1:12) அவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

இந்த மீட்பும் விடுதலையுமே நம்முடைய இரட்சிப்பின் அனுபவத்திற்கும், ஆத்தும இரட்சிப்புக்கும் அஸ்திபாரம் ஆகும்.

 2]  நித்திய ஜீவன் : சரீர, ஆத்தும மரண பயத்திலிருந்து விடுதலை 

பயம் வேதனையுள்ளது என்று பரிசுத்த வேதம் போதிக்கிறபடி, மரண பயம் என்பது இன்னும் கூடுதலான வேதனை. இறந்து விடுவோமோ என்ற பயம். இந்த உலக வாழ்க்கை முடிந்து போனதோ என்ற கலக்கம். நாம் நேசிக்கிற எல்லோரையும் விட்டு பிரிந்து போக வேண்டுமோ என்ற கொடிய கவலை. மட்டுமல்ல, இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் என்ன இருக்கிறது, நாம் எங்கே போகிறோம் என எதுவும் தெரியாத நிலை. இப்படி பல வகைகளில் மரண பயம் கொடியது. 

இப்படிப்பட்ட கொடிய மரண பயத்தை போக்கவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு மனிதனாக வந்து பிறந்தார்.

மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு வாழ்க்கை இருக்கிறதா? மரணத்திற்கு பிறகான வாழ்க்கை எப்படிப்பட்டது? மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மனிதர்களுக்கு தேவையான ஒன்றா? அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? என எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்த பொழுது போதித்திருக்கிறார்.

பரிசுத்த வேதத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதை விளக்கிச் சொல்லுவதை கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாக சற்றே தியானிப்போம். இந்த சத்தியத்தை அறிந்து கொள்வோம். விசுவாசிப்போம். மரண பயத்தை, மரணத்தை  ஜெயிப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும் வாழும் நிலையான வாழ்விற்குள், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்போம்.

மரணம், அதாவது உடலில் ஏற்படும் மரணம் என்பது ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் (உடல்) என தேவனால் படைக்கப்பட்ட மனிதனுக்குள் இருந்து ஆவியும், ஆத்துமாவுமாகிய உள்ளான மனிதன் உடலை விட்டு பிரிந்து செல்வதே ஆகும்.

இந்த உலகத்தில் நாம் வாழும் பொழுது, சகலத்தையும் படைத்து ஆளுகிற சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய தேவனுடைய வார்த்தைகளை கைக்கொண்டு. அவருடைய வழிகளில் நடந்து பரிசுத்தத்தையும் நீதியையும் விசுவாசத்தையும் நாம் வாழ்வின் முடிவு வரை காத்துக்கொண்டு மரணத்தை சந்திக்கும் பொழுது ஆவியும் ஆத்துமாவும் இணைந்த உள்ளான மனிதன் தேவனிடத்தில் பரலோகம் சென்று அவரோடு என்றென்றைக்குமாய் பரலோகத்தில் வாழும் பாக்கியத்தை பெற்றுக் கொள்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே மண்ணோடு மண்ணான உடலும் உயிர்ப்பிக்கபட்டு அழிவில்லாத மறுரூபமாக்கப்பட்டு இணைந்து  முழு மனிதானாக நித்திய ஜீவனோடு பரலோகத்தில் அவரோடு என்றென்றும் பரம சந்தோஷத்தோடு வாழுகிறான்.

(சங்கீதம் 68:20) நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.

(எபிரெயர் 2:14-15) ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், (15) ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

(யோவான் 6:47) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(யோவான் 5:24) என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(1 யோவான் 5:12) குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

(யோவான் 11:25) இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

(1 கொரிந்தியர் 15:22) ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

(யோவான் 6:39) அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

(யோவான் 6:40) குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

(யோவான் 12:50) அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

(யோவான் 8:51) ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

(யோவான் 10:27-29) என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. (28) நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (29) அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

(1 யோவான் 5:11) தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

(1 யோவான் 5:20) அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேகங்களின் மீது வந்து நின்று முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும், அடுத்து  ஆயத்தமாயிருக்கிற தம் பிள்ளைகளையும் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கி அழைத்துச் செல்கிற இரகசிய வருகை, அதற்கு பிறகு யாவருடைய கண்களும் காண பகிரங்கமாய் இந்த உலகிற்கு வருகிற அவருடைய இரண்டாம் வருகை மிக சமீபமாய் இருக்கிறதே. ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல செல்ல, அவருடைய வருகையை ஒவ்வொரு நாளாக நெருங்கிக் கொண்டிருக்கிறோமே. ஒருவேளை, பாவத்திலிருந்து, மரண பயத்திலிருந்து விடுதலையாகாமலேயே  இப்பூமியில் வாழ்ந்து முடித்துவிட்டால்....அதன் பிறகு?

ஆவி, ஆன்மா மற்றும் உடலைக் கொண்ட மனிதனின் ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு சென்று சேரும், உடல் மண்ணோடு மண்ணாகும் (ஆதியாகமம் 2:7, சகரியா 12:1, பிரசங்கி 12:7, யோபு 34:14-15). 

ஆன்மா அல்லது ஆத்துமாவின் நிலை? 

ஆத்தும மரணமாகிய  நித்திய நரக தண்டனை. பரிசுத்த வேதம் இதை இரண்டாம் மரணம் என்று அழைக்கிறது.

(மத்தேயு 10:28) ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

(வெளிப்படுத்தின விசேஷம் 21:8) பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இதை சொல்லியிருக்கிறார்.

(யோவான் 8:47-48) தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். (48) என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

 தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.

Thou art my King, O God. (Ps 44:4)

Pray


இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...

எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)

வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2) 

...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35) 

சங்கீதம் 23

SRM QR Code



Help: Scan this image with a QR Code Reader/Scanner from your smart phone / tab.

Let's sing Psalms (Ps 69:30)

Meditation

  • Let's Meditate
  • Praise Offering
  • Bible Quiz - தமிழில்
  • New Believers
  • For your Spiritual Life
  • Sing and Praise

Holy Bible

  • புதிய ஏற்பாடு (Audio Bible)
  • பரிசுத்த வேதாகமம் (புத்தக வடிவில்)
  • தமிழ் - KJV (Parallel Reading)
  • தமிழ் - NKJV (Parallel Reading)

About

  • Sharon Rose Ministries
  • Contact SRM
Copyright © 2025 Sharon Rose Ministries. All Rights Reserved.